Thursday, July 15, 2010

ஆனந்த விகடனில் எனது குறும்படம்


ஒரு மாதத்திற்கு முன் என் குறும்பட குறுந்தகடை ஆனந்தவிகடனுக்கு அனுப்பிவிட்டு, ஒரு வாரம் கழித்து அதன் முதன்மை நிருபர் நா.கதிர்வேல் அவர்களை கைபேசியில் தொடர்பு கொண்டபோது, குறுத்தகடு கிடைத்துவிட்டது, உங்களை போன்று நிறைய குறுத்தகடு வந்துகொண்டேதான் இருக்கிறது, ஆகவே பத்து நாட்கள் கழித்து பேசவும், நிலவரம் சொல்கிறேன் என்று அலையை துண்டித்துவிட்டார். இருபது நாட்கள் கழித்து மீண்டும் பேசினேன், தலைமை நிருபர் பாரதிதம்பி அவர்களின் கைபேசி எண்னை கொடுத்து பேசுமாறு சொன்னார். நானும் பேசினேன், நேற்றுதான் செலக்ஷன் தேர்வுக்கு அனுப்பயுள்ளோம் தேர்வாகி விட்டதென்றால் அடுத்தவார விகடனில் வரும், வரவில்லையென்றால் தேர்வாகவில்லை என்று அர்த்தம் என்றார்.

இதோ! வந்துவிட்டது, விகடனுக்கு நன்றி.
இசைக்குழு அகம், படத்தொகுப்பாளர் நரேந்தரகுமார், டைட்டில் டிசைனர் சோமசுந்தரம், ஒளிப்பதிவாளர்கள் சந்துரு, மோகன்ராஜ், பாலா, அருண்ராஜ், காளிராசா, மணி மற்றும் நடித்தவர்கள் ஆகியோருக்கு இத்தருணத்தில் என் நெஞ்சார்ந்த நன்றியை சொல்லிக்கொள்கிறேன்.













Stills: சந்துரு, மோகன்ராஜ்.

இவர்களில் யார் அடுத்த முதல்வர்?

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வருவதற்கு ஒரு வருட முன்பிருத்தே கணிக்க தொடங்கி விடுவார்கள் அடுத்த முதல்வர் யார் என்று, இதில் வார பத்திரிக்கைகளின் பங்கு பிரதானதாக இருக்கும். சென்ற ஆட்சியின் ஓர் அலசல், எதிர் கட்சிகளின் எதிர்நீச்சல், கூட்டணி பலம், இவருடன் இவர் கூட்டணி வைத்தால் வாய்ப்பு, தொகுதி பிரித்தல், தேர்தல் அறிக்கை, மக்கள் கருத்து இப்படி நீண்டுக்கொண்டே இருக்கும் தேர்தல்நாள் வரும் வரை.

தனித்து நின்று டெபாசிட் இழப்பவர், கூட்டணியாக ஒட்டிக்கொள்ளும் சிறுபான்மை கட்சியினர், இவர்களெல்லாம் முதல்வர் போட்டிக்கே தகுதியில்லாதவர்கள். வரும் தேர்தலில் தகுதயுள்ளவர்கள் இரண்டே பேர்தான்.


தமிழ்நாட்டில் பெரும்பாலும் கிராமங்கள்,விவாசயிகள்,ஏழைகள். விவசாயகடன் தள்ளுபடி, மருத்துவ காப்பீட்டு திட்டம், நிலங்களுக்கு இலவச மின்சார இணைப்பு, பள்ளியில் வாரத்திற்கு மூன்று நாட்கள் முட்டை, இலவச திருமண மண்டபம், வேட்டிசேலை, இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, சாக்கடை தெருவெல்லாம் சிமென்ட் சாலை, வீட்டிற்கு வீடு வண்ண தொலைக்காட்சி, மத்திய அரசின் கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் வருடத்திற்கு தொண்ணூறு நாட்கள் வேலை, இப்படி நாம் கட்டிய வரியை மிஞ்சும் அளவுக்கு ஏழைகளின் மனங்களை குளிரவைப்பது சாத்தியமே! ஆனால் சாத்தியபடுத்தியது திராவிட முன்னேற்ற கழகம்.

கிராமத்தில் எனக்கு தெரிந்த ஒரு கிழவி, பள்ளிகூட வாசலில் ரொம்ப வருடங்களாக மிட்டாய், பழங்கள் விற்றுகொண்டிருந்தது, இன்றும் அப்படிதான். என் வீட்டிற்கு வந்து ATM கார்டு ஒன்றை கொடுத்து, 3555 இதன் பின்நம்பர், சென்ற மூன்று மாதம் Government வேலை திட்டத்தில் வேலை செய்த 9000/- ரூபாய் இருக்கும், அதை எடுத்து இந்த Account -இல் போட்டுவிடுமாறு இன்னொரு சேமிப்பு வங்கி புத்தகத்தை கொடுத்தது, நான் விளக்கம் கேட்டு பேசும்போது, City -ல கொத்து கொத்தா சம்பாத்தியம் பண்றாங்க, நான் விக்கிற பழங்களுக்கு ஆஸ்பத்திரிக்கு போகவே சரியாய் இருந்திச்சி, காப்பீடு திட்டத்தால இப்ப அந்த காசு மிச்சமாகுது. கேழ்விறகு குடிச்சிட்டிருந்த காலம் மாறி ரேஷன் அரிசியில மனசார சாப்பிட்டு அதுலேயும் காசு மிச்சமாகுது (கேழ்விறகு 1kg rs.7), வீட்ல என் பேரன் டிவி பாத்துட்டு உலகத்துல நடக்கிற அத்தன விசயத்தையும் ஒப்பிக்கிறான், பள்ளிகூட படிக்கிற என்மகளையும் மருமகனையும் இழந்த என் பேரன் படிச்சு நகரத்துக்கு போய் சம்பாதிச்சி நல்லா இருக்கத்தா.... என்று சொல்லி பெருமிதம் அடைந்த அளவு கண்ணில் அடங்காதது. ஏழைகளின் மனம் வரை எவன் தொடுகிறானோ அவனே முதல்வன்.

மருத்துவர் தன் வாரிசுகளை சிறந்த மருத்துவர்கள் ஆக்கவே விரும்புவர், தொழிலதிபர் தன் வாரிசுகளை சிறந்த தொழிலதிபர் ஆக்கவே விரும்புவர், நடிகன் தன் வாரிசுகளை நடிகனாக்கவே விரும்புகிறான், ஒரு அரசியல் தலைவன் தன் வாரிசுகளை சிறந்த அரசியல் தலைவனாக்குவதில் என்ன தவறு?

தமிழக அரசியலில் கூறுப்போட நிறைய சமாச்சாரங்கள் இருக்கிறது. இப்போதைக்கு எழுதிய தலைப்புக்கோர் முடிவுக்கு வரலாம். இந்தியாவில் கலைஞர் கருணாநிதி போன்ற அனுபவமிக்க அரசியல் தலைவர்களுக்கு அடுத்த தலைமுறையில் அனுபவமிக்க,அறிவுமிக்க தலைவன் மு.க.ஸ்டாலின் என்றால் மிகையாகாது. துணை முதல்வராக இருக்கும் இவர் இன்றும் தன் இணையத்தளத்தில்(www.mkstalin.net) மக்கள் குறைகளை, அரசு அலுவலக ஊழல்களை அனுப்பினால் உடனே நல்ல முடிவுக்கு கொண்டுவருகிறார், ஆட்சி மற்றும் தன் செய்கையின் குறைகளை கேட்டு ஆளும் திறனையும் வளர்த்துக்கொள்கிறார். விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ற நாடு வளர்ச்சியில் அக்கறை கொள்ளும் இத்தளபதியே அடுத்த முதல்வர் என்பதில் ஐயமில்லை.

Tuesday, July 13, 2010

தங்கத்தின் மீது பெண்களுக்கு ஏன் தனி ஈர்ப்பு?













என் நண்பரின் ஆறுமாத குழந்தையை பார்ப்பதற்காக அவருடைய வீட்டிற்கு சென்றிருந்தேன். நண்பனின் உறவினர் அந்த குழந்தையை தூக்கி, "செல்லக்குட்டி, கன்னுக்குட்டி, சிங்கக்குட்டி...என்று கொஞ்சி கொண்டிருந்தார். சமையல் அறையில் இருந்து குழந்தையின் தாய் ஏதோ முனங்கி கொண்டே தேநீர் கொண்டுவந்தார். குழந்தையை கொஞ்சி கொண்டு இருந்தவர் தொடர்ந்து, தங்கக்கட்டி..." என்று கொஞ்சும்போது, குழந்தையின் தாயின் முகத்தில் புன்னகையின் பூரிப்பை பார்க்கவேண்டுமே! அப்படியொரு சந்தோஷமான முகபாவனை.
பின்னர் நான் குழந்தையை தூக்கி தோள்பட்டையில் வைக்க முற்பட்டேன், அழ துவங்கிவிட்டது. நண்பனின் உறவினர் வாங்கி அன்பான வார்த்தைகள் சொல்லி அழுகையை நிறுத்த முயற்சித்தனர் முடியவில்லை. குழந்தையை தாய் வாங்கி சீராட்டி அறையினுள் சென்று பாலுட்டி பின் வந்து தூங்க வைத்தார். நண்பனிடம் பேசிக்கொண்டே, தூங்கும் குழந்தையின் அழகை ரசித்துக்கொண்டிருந்தபோது, குழந்தையின் கைவிரலில் ஒரு தங்க மோதிரமும், கழுத்தில் ஒரு தங்க சங்கலியும் எனக்கு விசித்தரமாக காட்சியளித்தது.

அக்குழந்தைக்கு தங்கத்தை பற்றி என்ன தெரியும்? ஏன் தங்கத்தை அணிந்துவிட்டு இருக்கிறார்கள்? கள்ள கபடமில்லா குழந்தை என்ன அசிங்கமாகவா இருக்கும் அழகு என்று நினைத்துக்கொண்டு தங்கத்தை அணிந்துவிட? இல்லை பணக்கார வீட்டு தங்க குழந்தை என்று உறார் சொல்லவா? இப்படி பலவாறு மனதில் கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தன.

இதையொரு பழக்கமாகவே ஆக்கிவிட்டார்கள். இப்பழக்கம் எங்கிருந்து வந்திருக்ககூடும் என்று பிரிதொரு காலத்தில் தானாகவே எனக்கு புலப்பட தொடங்கியது.
பெண்மகளின் திருமணத்திற்கு பெற்றோர்கள் தங்கம் சேர்ப்பது கஷ்டமான இஷ்டம். காரணம், தன் மகளின் வாழ்க்கை. இதற்கு மட்டுமே பல வருடங்கள் உழைக்கவேண்டியதாயிற்ருக்கிறது. திருமணத்திற்கு ஆண்மகன் தங்கம் வாங்குவதில்(பெண்வீட்டாரிடமிருந்து) தனி ஆர்வம் இல்லைஎன்றாலும் ஆர்வம்தான். காரணம், பெற்றோர்கள். இது சமுதாயத்தில் ஒரு பெரும் தங்க சங்கலி தொடரே! அதனாலயோ என்னவோ பெண்களுக்கு தங்கத்தின் மீது நெருக்கமான ரசனை வந்துவிடுகிறது. தங்கத்தின் பின்னால் தன் பெற்றோரின் அன்பும்,உழைப்பும் அல்லது தன் கணவனின் அன்பும்,உழைப்பும் அல்லது அவளின் உழைப்பும், விருப்பும் இருப்பதினாலோ என்னவோ பிரம்மையான ஈர்ப்பும் தொத்திக்கொள்கிறது.

இதன் பிற்பாடு பெண்கள் கழுத்தில் தங்கம், கையில் தங்கவளையல் முடிந்தால் மோதிரம், காதில் தங்கஜிமிக்கி, காலில் வெள்ளி கொலுசு இல்லாமல் இருப்பது தன் உடலின் உறுப்புக்களில் ஒன்று இல்லாதது போலவும், அழகின் முக்கியமாகவும், ஆடம்பரத்தின் அஸ்திவாரமாகவும், எதிர்நோக்கும் உறவினர்கள்,நண்பர்களிடம் பெருமையாகவும் காட்டிக்கொள்ளவே விரும்புகிறார்கள். இல்லாதவர்கள் போலி தங்கமோ, பித்தளையோ, பிளாஸ்டிக்கோ அணிய தவறுவதில்லை.

சமீபத்தில் எங்கள் வூரில் பத்து வருடத்திற்குமுன் கல்யாணமான ஒரு பெண்ணின் கழுத்தில் மாடுக்கு கட்டும் மூக்கனாகயிறு சைசில் ஒரு தடிமனான தங்கசங்கலி தொங்குவதை பார்த்து மிரண்டுபோய் கேட்டேன். மெலிசான எழு சங்கலி போட்டுருந்தேன், எல்லாருக்கும் பொறாமை, அதான் உருக்கி ஒரே ஒரு சங்கலி போட்டுள்ளேன் என்றார். என்ன ஒரு பதில், வெய்ய்டான பெண் இவளோ!

அவசர பணகஷ்டத்தினை கட்டிய மனைவி கொண்டு வந்த தங்கம் தான் மீட்கிறது என்பது மட்டும் நிசப்தரமான உண்மை. GOLD IS ATM (Any Time Money)

Sunday, July 11, 2010

இவனோ! அவனோ! எவனோ!





சமீபத்தில் ஒருகுறும்படத்திற்கு பாடலெழுதும் வாய்ப்பை உருவாக்கி கொண்டேன். காரணம், இதற்கு முன்னால் நான் எழுதியதில்லை. தொலைக்காட்சியில் எதாவது ஒரு பாடல் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, நான்கு, ஐந்து அலைவரிசைக்கு தாவி விட்டு திரும்ப வரும்போது அப்பாடல் முடிந்திருக்க வேண்டும். இதன் ஷுச்சாமோ ஒவ்வொருவரின் விருப்பு ரசனை. கானாபாடல், சோகப்பாடல், காதல்பாடல், தத்துவப்பாடல் எதுவாயினும் இசைராகம்,பாடல்வரிகள்,பாடியவரின்குரல், படமாக்கப்பட்ட விதம், இடங்களின் தேர்வு, நடித்தவர்களின் இயற்க்கைதனம், இவற்றில் பெரும்பாலனவை ரசனைக்குட்பட்டால்தான் நம் விருப்பதிற்குரியவையாக இருக்ககூடும்.

அப்படி விருப்பத்திற்கு கொண்டுவர துடித்தவர்களின் உழைப்பு அபாரமானதாகவோ,அளவானதாகவோ இருக்கலாம். வெற்றியோ! தோல்வியோ! இந்த உழைப்பில் நானும் இருந்தேன் என்று மார்தட்டிக்கொள்வதில் மகிழ்ச்சியே! குறும்படமாக இருந்தாலும்.

இதோ இது உருவான பின்புலம், முதலில் கதைக்கேற்ற வரிகள் எழுதினேன், இதற்குமுன் வந்த மற்றவர் வரிகளின் அர்த்தங்களாக இருக்ககூடாது என்ற எச்சரிக்கைவுடன். ஓர் இரவு முழுவதும் வரிகள் என்னை தின்றுவிட்டு விடிய துவங்கியது! யோசித்த குழப்பமோ, விழித்திருந்த களைப்போ இல்லை எழுதிமுடித்த சந்தோசமோ, விடிந்ததும் நான் சூரியனை இரவாக்கினேன்; மறுநாள் ஐந்துபேர் கொண்ட அகம் இசைக்குழுவிற்கு வரிகள் செல்லப்பட்டது. "வரிகள் பலசமயங்களில் கவனிக்கப்படாமல் போகலாம் தேறாத இசையால்". இசைராகம் மனதிற்கு புதுமாதிரியான தோரணையுடன் தேறியவையாகவே இருக்க வேண்டும் என்பதில் அகம் பிடிவாதமாக இருந்தார்கள்.ஒருவாரம் மனதை உருக்கி இசையைஉருவாக்கி கொடுத்துவிட்டார்கள்.

இயக்குனர் இன்னும் பாடல் பிடிப்பதற்கான இடத்தை தேடி அலைந்துகொண்டிருந்தார். பாடல் கிடைத்ததும் உற்சாகத்துடன் பாடல் படபிடிப்பதர்க்கு தயாரானார். உத்வேகத்துடன் ஒளிப்பதிவு செய்ய நண்பர்கள் சந்துரு, மோகன்ராஜ், பாலா, அருண்ராஜ், காளிராசா, ஆட்டோமணி ஆகியோர் இரண்டு நாட்களில் தனிதனியே வெவ்வேறு காட்சிகளை ஒரு குறும்படத்திற்கு!!!!!! ஆறுபேர் ஒளிப்பதிவு செய்தது இதுவே முதல்முறையாக கூட இருக்ககூடும். அதில் நடித்தவர்களின் முக்கிய ஒருபாத்திரம் (சிறுவன், பெரியவன்) மற்றும் குப்பை பொறிகியவர்கள் மூன்றுபேர், போக்குவரத்து காவலாளி, பிளாஸ்டிக் அட்டை கடையில் வேலைபார்ப்பவர் ஆகியோருடன் குடிசைவாழ்பகுதி, சாலையோரஉள்ள ரெடிமேட் உணவுக்கடை, தொங்கும் பாலம் ஆகியவை தங்கள் பங்கினை அளிக்க வேண்டிய நிர்பந்தம்.
நண்பர் மோகன்ராஜ் படத்தொகுப்பு மென்பொருளை இறக்கி இயக்குனர் கையில் கொடுத்துவிட்டார். அதை வைத்து போராடி கொண்டிருத்த சமயத்தில் இயக்குனரின் நண்பர் நரேந்தரகுமார் ஆறு நாட்களில் பாடலுடன் படத்தையும் தொகுத்து முடித்து கொடுத்துவிட்டார். பின்னணி இரச்சல், டப்பிங், இசை இதிலும் இவருடைய பங்கு அலாதியானது.

மொத்தத்தில் என்ன புதுமை என்றால் எல்லோருமே புதியவர்கள், சினிமாவின் தொலைதூர பார்வையாளர்களே! எங்களை களத்திற்கு குதிக்கவைத்தது "உங்களின் ரசனை விருப்பத்திற்கு கொண்டுவர துடிக்கும்" எங்களின் ரசனை ஆர்வமே.

இக் குறும்படத்திற்கு இயக்குனர் அடியனே!

இப்போதெல்லாம் ஷங்கரின் படத்தில் வரும் பாடலை உன்னிப்பாக கவனிக்க ஆர்வமாக உள்ளது. எத்தனை பேர்களின் எத்தனை வருட உழைப்பு.

இதோ எங்கள் குறும்படத்தின் பாடல்

Thursday, July 8, 2010

பழசு BUT உண்மை

உண்மை கசக்கும்!! கண்ணை உறுத்தும்!!
என்னை பொருத்தவரையில் திரைவிமர்சனம் என்பது கதையை விவாதிப்பதுஅல்ல. நிறைய தொலைகாட்சி தொல்லையர்கள்,வாரபத்திரிகை கோமாளிகள், செய்திதாள் கிறுக்கர்கள் இதைதான் செய்துகொண்டுவுள்ளனர். 'இவ்வளுவுதனா கதை' என்று நாக்கும் மேல்நாடையும் ஒட்டாமல் வாந்தி எடுத்து நாஸ்தி பண்ணி பார்ப்பவனோ! படிப்பவனோ!. அய்யா! சன் டிவி! உங்க படம் மட்டும் முதல் இடத்துலேயே மாச கணக்குல இருக்கே! ரொம்ப தரமான தயாரிப்போ! தாத்தா விகடன்! பரவாயில்லை பத்திரிகைனு பரவலா சொன்னதுனால படக்னு சைஸ் பெருசாக்கி! பைசாவை எத்தியாச்சி! சரக்குதான் சறுக்கிட்டே போவுது!! SMS மார்க் எப்படி 44..45...ஒ...50 ஆ நடக்கட்டும்! நடக்கட்டும்! ஏளனம் செய்பவர்கள் ஒரு படத்தை படைத்தது பார்த்தல் தெரியும், கிழே ஒன்னுக்கு வருகிறதா! இல்லை ரத்தம் வருகிறதா! என்று, அந்தளவுக்கு உயிர்வலி. ஆகவே படத்தில் உழைத்தவர்களின் தனித்திறமையை மட்டும் விமர்சிப்பது உத்தமம். என் விமர்சனத்தை இனிவரும் எல்லா! மன்னிக்கவும் குறிப்பிட்ட சில படங்களுக்கு மட்டும் விமர்சிக்கவுளேன்! அதுதான் எனக்கும் உத்தமம்.
பழைய திட்டு : ஆழ்வார் அஜித்துக்கு. தல! சுதாரிப்பு வேணும் தல
---------


நான் கடவுள்

பாலா:ஆர்யாவின் அறிமுக-காட்சி ஒன்றுபோதும்,அப்படியோர் படைப்பாளி

இளையராஜா: இசைமேதை உலுக்கிய இசைமலை

ஜெயமோகன்: பார்பவர்களின் கைகள் அடிக்கடி ஓசை எழுப்புகிறது

ஆர்தர் வில்சன்: காசிக்கு தனியா போக தேவையில்லை

ஆர்யா: லாஜிக் இல்லாமல் ஹீரோயிசம் பண்ணும் இப்போதைய சிற்சில..ஆகியோரின் மீது ருத்ரன் தாரளமாக புலுத்தி மூத்திரத்தை தெளித்தால் தேவலம்.( ஏ!.. கடவுளப்பா!)

பூஜா: ஆயிசுக்கும் போதும் ( கொஞ்ச ஓவர்தா )

ராஜேந்திரன்: அடியே! இந்திய சினிமா வில்லன்களா! கத்துனா மட்டும்
எல்லோரும் வில்லன்கள் ஆகிட முடியாது! போயீ பாருங்கடி!(அமரர்ரகுவரன், நாசர், சத்யராஜ், நானா படேகர் தவிர)

பிச்சைகாரர்கள் : இந்திய சினிமா நன்றிக்கடன் செலுத்தவேண்டும்.
(நன்றி பாலாவுக்கு, கடன் பிச்சைகாரர்களுக்கு)

(பொது):
திரைக்கதையோ! எதோ! ஒன்று குறைகிறது. ஆனாலும் போவது தெரியவில்லை! திடீரென்று முடிந்துவிடுகிறது.

சதவிகிதம் : First Class:****
[மதிப்பெண்: Distinction:*****, First Class:****, Second Class:***,
Pass:**, Fail:*]